புதன், ஆகஸ்ட் 24, 2011

உடையும் சொற்களின் ஈமச் சடங்கு

*
அவன் வரத் தவறிய பாதையின் பூக்கள்
இதழ்ப் பறத்துகின்றன
நிழல் தோறும்

தங்கிப் போதல் சாத்தியம் தானென
பிதற்றுகிறான் கையில் கிடைத்த
தாளின் நுனி மடக்கி

உடையும் சொற்களின் ஈமச் சடங்கை மட்டும்
கண்ணீர்ப் படித்துறையில் கணுக்கால் நனைய
மீன்களுக்கு இட்டப் பொரியென
உப்பச் செய்கிறான்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 22 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4694

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக