ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்..

*
சலுகையோடு நீட்டப்படும்
கரங்கள் 
பெற்றுக் கொள்கின்றன 
ஒரு கருணையை 

மரணத்தை ஏந்திச் செல்லும் 
கால்கள் 
அடையத் துடிக்கின்றன 
இறுதி தரிசனத்தை 

இருப்புக்கும் இன்மைக்குமான 
பெருவழியில் 
சுவடுகளாகிறது
திரும்புதலின் பாதையும் 
காத்திருந்து எரியும் தெருவிளக்கும் 

***** 

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 28 - 2011 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக