புதன், ஆகஸ்ட் 24, 2011

தனிமையைக் கைப்பற்றுதல்

*  
ஒரு
தனிமையைக் கைப்பற்றுதல்
என்பது
கானலாகிக் கரைகிறது

கான்க்ரீட் நகரின்
நிமிடங்கள் சதா துருப்பிடிக்கின்றன

அதன்
தூய்மைக் கணத்தை தரிசிப்பதற்குள்
எத்திசையிலிருந்தாவது
துப்பப்படுகிறது
அதன் மீது ஓர்
எச்சில்

தனக்கானத் தனிமையைக்
கைப்பற்றுதல்
என்பது
வளரும் சுவர்களுக்கு நடுவே
அசையாத பல்லியின் கீற்றுப்
பார்வையை ஒத்துப்
பெருகுகிறது
 
இந்நகரெங்கும் கைவிடப்பட்ட
குறுகலான
சந்துகளைப் போல்
 
*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஆகஸ்ட் - 6 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15979&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக