ஞாயிறு, நவம்பர் 06, 2011

எழுதி நிரம்பிய உரையாடல்களிலிருந்து..

*
ஒரு சொல்லைக் கூட உதிர்க்காமல்
வெளிச்சம் இல்லாத இந்த அறையில்
எதை நீ கொளுத்திக் கொண்டிருக்கிறாய்

எழுதி நிரம்பிய உரையாடல்களை
மேஜையில் அப்படியே வைத்திருக்கிறாய்
நுனி மடங்கிய
அதன் ஒவ்வொரு பக்கங்களும் துடிக்கக்
காத்திருக்கிறது

நீ
செய்ய வேண்டியது எல்லாம்
ஒன்றே ஒன்று தான்

இதுவரை பிரயோகிக்காத
ஒரு புதிய சொல்லை
இந்த அறையின் அமைதியின்மை மீது
உச்சரிக்க வேண்டும்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 7 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4967

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக