வியாழன், நவம்பர் 24, 2011

காத்திருப்பின் சிறகு...

*
மிகுந்த தயக்கத்தோடு உட்கார்ந்திருக்கிறாய்
புத்தகங்கள் நிறைந்த தனித்த அறையில்

அலமாரியின் எல்லா அடுக்குகளின்
பின்வரிசை நிழலிலிருந்து
முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்குகிறது

கேட்கப் பயப்படும்
கேட்கத் தயங்கும் தெளிவற்ற குரல்கள் எல்லாமே
காலத்தில் அறுத்து வைத்திருக்கிறது
வரலாற்றின் தொன்மத் தலைகளை

இசை நிரம்பிய தருணத்தை வழிய விடுகிறாய்
அறையெங்கும் உனது பேரமைதியால்
நீ
எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாய்
எனது ஓசையற்ற ஒரு பிரவேசிப்புக்கு

இறகுகள் ஒவ்வொன்றாய் உதிர்கிறது
காத்திருப்பின் சிறகசைவில்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 28 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5036

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக