வியாழன், நவம்பர் 24, 2011

சப்தமெழுப்பி அசையும் இலை...

*
மொடமொடவென
சப்தமெழுப்பி அசையும் சருகின் மீது
பொழியும் மழை
அதன் நிறத்தைக் கரைத்து
பழுத்த இலையாக்குகிறது

நெகிழ
புல்தரையில் மல்லாந்து கிடக்கிறது
தன்னை விடுவித்து கறுத்த கிளையின்
பிளவைப் பார்த்தபடி

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 28 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5036

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக