செவ்வாய், பிப்ரவரி 22, 2011

அகாலத்தின் இலை நரம்பு..

*
நினைவின் படுதா கிழிந்து 
இரவு பெருகி வழிகிறது

பிடிக்குள் சிக்க மறுக்கும் வார்த்தைகளோடு
நிகழும் போரின் கூர்மையில்
சிந்துகிறது ரத்தப் புள்ளிகள்

உங்கள் ஏடுகளின் அடுக்குகளில்
படிந்து விட்ட தூசுகளை
ஆழ உறிஞ்சுங்கள்
வரலாற்றுக் கதாப்பாத்திரங்களின்
அபத்தங்கள் யாவும்
உங்கள் இதயத்தில்
ஒரு
கேன்ஸர் போல பரவட்டும்

நிராசையின் கண்ணாடிக் குடுவைக்குள்
கொட்டித் தீர்க்க சேமித்து வைத்த
உங்கள்
உரையாடல்களின் துயரம்

இந்த அகாலத்தின் இலை நரம்பில்
ஊர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு துளி தூக்கமென

பெருகி வழிகிறது
மேலும்
ஓர் இரவு

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ பிப்ரவரி - 23 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13161&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக