செவ்வாய், பிப்ரவரி 22, 2011

சல்லடைச் செதில்கள்

*
இன்னொரு முறை வாய்ப்பதில்லை
இந்தப் பாடல்

எழுதும்படி சொல்லிப் போயிற்று காற்று

கறையான்களின் இரவுகள் அரித்துவிட்ட
நினைவின்  குறிப்புகள்
சல்லடைச் செதில்களில்
வழிந்தோடுகிறது
மௌனக் குருதியை இழுத்துக் கொண்டு

ரீங்கார முனைப்புகளில்
பிடிப்பட மறுத்து
துகள்களென சிதறும் பாடல்

இன்னொருமுறை வாய்ப்பதில்லை
எழுதுவதற்கு தோதாக..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( பிப்ரவரி - 14 - 2011 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக