செவ்வாய், பிப்ரவரி 22, 2011

ஈர நிலத்தை ஒத்திருக்கிறது மௌனச் சமவெளி..

*
என்னில்
என்னை எதிர்கொள்வதற்கு
இன்னும் திறவாத கதவொன்றின்
வாசலில்
மெழுகப்படுகிறது

எளிதில் கடக்க முடியாத காலத்தின்
சொற்ப நிழல்

விழும் புகார்களின் வெளிச்சங்களை
திரைக் கட்டி மட்டுப்படுத்தும்
விசித்திரத்தை
மனச் சாளரத்தின்
சதுரக் கண்ணாடிக்கு மறுபுறமிருந்து
கிளைத்து விரிக்கிறது

இரவெங்கும்
தனிமையில் கெக்கலிக்கும்
நுண் அதிர் ஒலியலை செல்கள்

பச்சைமையோடு நீர்த்துப் புழுங்கும்
ஈர நிலத்தை ஒத்திருக்கிறது
மௌனச் சமவெளி

வேர் பரவுதலின் முடிச்சுகள் தோறும்
அவிழ மறுக்கின்றன
முன் முடிவுகள்

இன்னும்
திறவாத கதவுக்கு பின்னால் விரியும்
பெருங்காடு
சாவித் துளைகளின் வழியே
தெரிவதில்லை

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ பிப்ரவரி - 25 - 2011 ] 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13215&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக