செவ்வாய், பிப்ரவரி 22, 2011

வார்த்தையிலிருந்து பெயர்த்தெடுக்கும் ஒற்றையடிப் பாதை..

*
ஏதோ ஒரு பகல் பொழுதாக
நீ
எனக்கு புலர்கிறாய்

என்றோ ஓர் இரவின்
ரகசியங்களென திரள்கிறாய்

சப்தங்கள் எழ விரும்பாத
படிக்கட்டு வார்த்தைகளிலிருந்து
பெயர்த்தெடுக்கும்
ஒற்றையடிப் பாதையை
நீண்ட புன்னகையின்
புற வாசலிலிருந்து தொடங்குகிறாய்

மெல்ல கவிந்து திரும்பும்
உன் அந்தியின் நிழல்
கையிலேந்தி நிற்கிறது
என் அகாலத்தின் இசையை

கொஞ்சங் கொஞ்சமாய் கசியும்
இந்தத் தனிமை
கணுக்காலளவு வரை தொட்டு ஓடுகிறது
மௌன நதியிலிருந்து பிரிந்து

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 21 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக