செவ்வாய், பிப்ரவரி 22, 2011

இரவின் அகாலத்தில்..

*
மரணத்தின் விளிம்பு வரை சென்று
தலை கிறுகிறுத்த ஈ
நினைவில் அழுத்திக் குழம்புகிறது
தன்னைச் சுண்டிவிட்ட
விரலின் வேகத்தை

தன்
இரவின் அகாலத்தில்
வீடு திரும்பும் வழித் தவறி
இந்த
அறையில் திக்குமுக்காடும்
ஈயின்
வெளிச்சத்தை
அணைத்து விடாமல்

எரிய விடுகிறேன்
இரவு நெடுக
ஒற்றை டியூப்லைட்டை..

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 14 - 2011 ]


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3992

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக