புதன், மார்ச் 28, 2012

சொற்களை இழுத்துப் போகும் எறும்புகள்..

*
ஜன்னல் திரை விலகிய
நுண்ணிய கணத்தில்
கொஞ்சமாய் இந்த அறையினுள் நுழைந்துவிட்ட வானத்தை
என்ன செய்ய

சார்த்தி வைத்திருக்கும் வாசல் கதவின்
கீழ் இடுக்கு வழியே
எனது வார்த்தைகளைத் துண்டு துண்டுகளாக
இழுத்துப் போகும் அந்த எறும்புகளை
எப்படி அதட்ட

பிளாட்பாரத்தில் வளர்ந்திருக்கும்
கார்ப்பரேஷன் மரத்தின்
அடர்த்திக் கிளையிலிருந்து
சதா எதையாவது சொல்லித் திட்டிக் கொண்டிருக்கும்
அணில்களை எப்படி புரிய வைக்க

உங்கள் ஜன்னலுக்குள் அத்துமீறி
நுழைந்துவிட்டவன் நானென்று

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ மார்ச் - 30 - 2012 ]

http://www.navinavirutcham.blogspot.in/2012/03/blog-post_2625.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக