வியாழன், மார்ச் 29, 2012

வனத்தின் பெருந்துயரம்..

*
வனத்தின் பெருந்துயரம்
மொட்டைமாடி வெயிலில் காய்வதாக
கீச்சிடுகின்றன சொற்ப குருவிகள்

சிறு பச்சை இலைகள்
கைப்பற்றிக் கொள்கின்றன
சிதறும் நீர்த்துளிகளை

வேர்களின் உலகமொன்று
உயிர்த்திருக்கும் காரணத்தை
ஈரம் சொட்ட தொட்டிச் செடிகளுக்கு மேல்
நைலான் கொடியின் மீது உடைகளோடு காயப் போடுவதை
அவர்கள் உணர்வதில்லை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 19 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5398

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக