வியாழன், ஏப்ரல் 26, 2012

பின்னும்..

*
ஈ மொய்க்கும் இரவின் நிறத்தை
காவல் காக்க பணிக்கிறது
வக்கற்ற அகாலத்தின் வெளிச்சம்

அழுந்தத் தழுவி முத்தமிட்ட
மரணத்தின் கன்னத்தில்
பின்னும்
வழிந்துக் கொண்டிருக்கிறது

எச்சில் கோடாய்
வாழ்வு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5460

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக