வெள்ளி, ஏப்ரல் 27, 2012

நேனோ நொடி

*
ஒரு நிமிடத்தின்
இறுதி நொடியிலிருந்து
அடுத்த நிமிடத்தின் முதல் நொடிக்குள்
நுழையும்போது

ஏன் இத்தனை பதற்றம்
ஏன் இத்தனை அயர்ச்சி
ஏன் இத்தனை மர்மம்
ஏன் இத்தனை சூட்சுமம்
ஏன் இத்தனை நம்பிக்கையின்மை
ஏன் இத்தனை மறுதலிப்பு
ஏன் இத்தனை மௌனம்
ஏன் இந்தத் தனிமை

நுழைதலுக்கும் வெளியேறுதலுக்கும்
நடுவே நிற்பதற்கென ஒரு வெளியைக்
கண்டுகொள்வதற்குள்

இழைப் பிரிந்து இழுத்துக் கொள்கிறது
அதனுள்
உள்
ஒரு நேனோ நொடி

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5520

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக