வெள்ளி, ஏப்ரல் 27, 2012

ரகசியமற்று பரவாமலிருப்பது பற்றிய அரிச்சுவடி

*
என்னை
அவனது கைவிளக்கு என்றான்
தீ நுனிப் போல் துடித்துக் கொண்டிருக்கிறேன்
என் திரியைப் பாதுகாக்கும்
வழியற்று

என்னை
அவளது இரவென்றாள்
ரகசியமற்று பரவாமலிருப்பது பற்றிய
அரிச்சுவடியை அந்த அறையெங்கும் தேடுகிறேன்
அகப்படவில்லை

என்னை
அவர்களது பைத்தியக் கணமென்றார்கள்
தொடர்ந்து உளறிக் கொண்டே இருப்பதற்குரிய
தத்துவத்தின் கிழிந்தப் பக்கங்களை
இடையறாமல் தைத்துக் கொண்டிருக்கிறேன்

நைந்து கிடக்கும் காலத்தின் பெருவிரல் அழுக்கில்

என்னை
எனது மௌனமென்று நிரூபிக்கும்
வார்த்தை ஒன்றை எப்போதோ தொலைத்துவிட்டேன்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக