*
நம்பிக்கையின் நிறங்கள்
கரைந்தோடும்
இந்த யாருமற்ற இரவில்
விடாமல் பெய்கிறது
தனிமை..
காரைப் பெயர்ந்துதிரும்
இருள் சுவரில்
நீ விட்டுச் சென்ற
வார்த்தைகள் யாவும் ..
துளிகளென திரண்டு
என் கணுக்கால் நக்கி ஓடுகிறது
கசடுகளாக
உன் உதடுகளை உருட்டி..
********
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 28 - 2011 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4146
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக