திங்கள், மார்ச் 21, 2011

விடாமல் பெய்யும் தனிமை

*
நம்பிக்கையின் நிறங்கள் 
கரைந்தோடும் 
இந்த யாருமற்ற இரவில் 
விடாமல் பெய்கிறது 
தனிமை..


காரைப் பெயர்ந்துதிரும் 
இருள் சுவரில் 
நீ விட்டுச் சென்ற 
வார்த்தைகள் யாவும் ..


துளிகளென திரண்டு 
என் கணுக்கால் நக்கி ஓடுகிறது 
கசடுகளாக 
உன் உதடுகளை உருட்டி..

********
 
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 28 - 2011 ] 
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4146

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக