திங்கள், மார்ச் 21, 2011

ஒற்றை மீன்

*
எல்லையற்று நீளும் துயரச் சுவரில்
கரும்பாசி போல்
படிந்திருக்கிறாய்

தனிமைப் போக்கும் வழியற்று
அகன்ற கண்ணாடிக் குடுவையில்
நீந்தும் 
என்
ஒற்றை மீனுக்கு

உன்னைக் கொஞ்சம்
சுரண்டி
உணவிடுகிறேன்

அது
குமிழ் குமிழாய்
உடைத்துக் கொண்டிருக்கிறது
தன் பெருமூச்சை

*****


நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மார்ச் - 14 - 2011 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக