*
அப்படியொன்று
சொல்லப்பட்டதாகவே
வடியவில்லை
இந்த இரவு..
உன்
வசவுகளின் கிரணங்கள்
என்
அறையின்
எல்லாப் பொருட்களின் மீதும்
பூசப்பட்டிருக்கிறது..
உன் வெளியேறுதலுக்குப் பிறகு
இன்னும்
திறக்கப்படாத கதவுகள்
எதைக்
கையேந்தி நிற்கிறது
என்பதை அறியும் விருப்பமற்று
கட்டிலோரம் தரையில் நீண்டுக் கிடக்கும்
சொற்ப நிழலுக்குள்
ஒடுங்கிக் கிடக்கிறேன்
சுவற்றில் மோதிய சிதறல் உதரிகளாக
கிடக்கும் செல்போன் ..
நம் உரையாடல்களை அணைத்து வைத்திருக்கிறது..
*******
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மார்ச் - 27 - 2011 )
அப்படியொன்று
சொல்லப்பட்டதாகவே
வடியவில்லை
இந்த இரவு..
உன்
வசவுகளின் கிரணங்கள்
என்
அறையின்
எல்லாப் பொருட்களின் மீதும்
பூசப்பட்டிருக்கிறது..
உன் வெளியேறுதலுக்குப் பிறகு
இன்னும்
திறக்கப்படாத கதவுகள்
எதைக்
கையேந்தி நிற்கிறது
என்பதை அறியும் விருப்பமற்று
கட்டிலோரம் தரையில் நீண்டுக் கிடக்கும்
சொற்ப நிழலுக்குள்
ஒடுங்கிக் கிடக்கிறேன்
சுவற்றில் மோதிய சிதறல் உதரிகளாக
கிடக்கும் செல்போன் ..
நம் உரையாடல்களை அணைத்து வைத்திருக்கிறது..
*******
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மார்ச் - 27 - 2011 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக