சனி, ஏப்ரல் 09, 2011

இருப்பின் நிலம்..

*
ஒரு
வேர்க்கடலையைப் போல்
தோற்றம் கொண்ட
இந்த தனிமையை
உடைக்கிறேன்..

அதனுள்
இரண்டு மௌன விதைகள்
உருள்கின்றது

என்
இருப்பின் நிலமெங்கும்
கட்டுக்கடங்காத
உன் வேர்கள்..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஏப்ரல் - 18 - 2011 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக