செவ்வாய், பிப்ரவரி 14, 2012

பூ வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு கோப்பை மழை இரவு..

*
மௌனத்தைக் குழைக்கிறது இந்த மழையின் ஈரம்
தாழ்வாரத் தாளங்களின் குதித்தலோடு
சிதறும் சாரல்களின் புள்ளிகளில்
நனைகிறது அகாலம்

இந்த இரவு விடிவதை சாத்தியப்படுத்த முயல்கிறது
காற்றில் ஊசலாடும் குண்டு பல்பு

சுவர்களில் அசையும் நிழல்கள்
கை நீட்டி யாசிக்கின்றன என் மௌனத்தை

ஓயாத இம்மழை இரவின் ஈரத்தைக் கர்ச்சீப்பில் ஒற்றியெடுத்து
பிழிந்து வைத்திருக்கிறேன்
பூ வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு
பீங்கான் கோப்பையில்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5253

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக