செவ்வாய், பிப்ரவரி 14, 2012

துளிச் சலனம் விழுந்து... வட்டமென விரியும் பசலை...

*
அழுந்தத் துடைத்துக் கொள்ள எப்போதும்
ஒரு சின்னஞ்சிறு கைக்குட்டை உதவுகிறது

மறுப்பின்றி உச்சரிக்க நேரும் வாக்கியங்கள்
இணக்கத்தோடு இறுகத் தழுவும் ஸ்பரிசம்
ப்ரியமான பார்வையுடன் உதிரும் முத்தங்களின் வாசல்
அசைப் போட்டுத் தனித்திருக்க அனுமதிக்கும் மயக்கம்
கூடலில் முயங்கும் மௌனத்திலிருந்து வெளியேறும் ஒரு சொல்
மரணத்தின் துளி சலனம் விழுந்து வட்டமென விரியும் பசலை
ஊடலில் தென்றல் தொட்டு சிலிர்ப்பூதும் இசையின் லயம்

ஒவ்வொன்றிலிருந்தும் கோர்த்துக் கொண்டு
துளிர்த்துப் படரும் காமத்தின் ஈரம் சிவக்கும் முகத்தில்
மெழுகிப் பெருகும் தாபத்தை அழுந்தத் துடைத்துக் கொள்ள

ஒரு சின்னஞ்சிறு கைக்குட்டை உதவுகிறது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5276

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக