ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

அழைக்க மறுத்த குரலின் நீர்மை..

*
குளிர்கிறது
குளிர்கிறது
முதுகெலும்பின் நடு மஜ்ஜையிலிருந்து
நடுங்குகிறது உன் நிழல்

அழைக்க மறுத்த குரலின் நீர்மை மேற்பரப்பில்
அசைகிறது விரல்

சுட்டுகிறாய்
மௌனம் சுட்டுகிறாய்
உடைகிறது பிம்பம்
உள்ளங்கையில் ஏந்தச் செய்கிறாய்

நீண்ட இரவின் மனம் வனைகிறது என்னை

காற்றில் எழுதி நீளும் அனைத்தின் சாயல்களையும்
உள்ளடக்குகிறாய்
புரியவில்லை இந்த நிதானம்

குளிர்கிறது
கடுமையாய் குளிர்கிறது

முதுகெலும்பிலிருந்து விடுவி உன்னை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 27 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5326

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக