செவ்வாய், பிப்ரவரி 14, 2012

யாருமற்ற பொழுதின் சூரியன்

*
ஒரு போதும் அசைவதில்லை
நைலான் கொடியில் முறுக்கிக் கொண்டிருக்கும் நிழல்

ஒன்றிரண்டு ஈக்கள் மட்டும் நக்கிப் பார்க்கின்றன
அப்போதும் அதில் மீதமிருக்கிறது கொஞ்சம் வெயில்

கான்க்ரீட் சொரசொரப்பில்
இலைச் சருகொன்று தன் தடித்த நரம்புகள் உரச
சப்தமெழுப்பி உருட்டுகிறது காற்று

மருண்ட கண்களோடு நிழல் விளிம்பைத் துரத்தி
ஓடுகிறது வெயிலில் சிவந்த கட்டெறும்பு

யாருமற்ற பொழுதின் சூரியன்
மொட்டைமாடிச் சுவரில் யாரோ வைத்துப் போன
ஒரு பிடிச் சோற்றிலும் கொஞ்சம் காய்கிறது

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5276

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக