செவ்வாய், பிப்ரவரி 14, 2012

சரியும் பார்வையில் உதிரும் இறகு..

*
நீ
பிழியும் துணியிலிருந்து நழுவும் சோப்புத் துளிகள்
வெப்பமேறி சாகின்றன பாத விரல் வளைவில்

உன் சரியும் பார்வையின் குளிரில்
சிறகொன்று உதிர்க்கிறது இறகை

தடயங்களேதுமில்லா ரகசியமென
பின்வரும் இரவை நறுக்கி வைக்கிறாய்
மாடிப்படி முனையில்

மேல்நோக்கி குவியும் உதட்டில் தாழ
இறங்கித் ததும்புகிறது மௌனமாய் ஒரு முத்தம்

உரையாட மிச்சம் பிடித்து வைத்திருக்கும் சொற்கள்
இறக்கைத் துடிக்கக் காதருகே தொங்குகிறது
ஏனைய அர்த்தங்களைக் கொத்தி

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5276

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக