செவ்வாய், பிப்ரவரி 14, 2012

சாம்பலாகும் பொழுதொன்றின் விரல் பிடித்து..

*
எனக்குள் பற்றியெரியும்
நீண்டச் சாலையில்
கைவிடப்பட்ட சொற்களோடு நிற்கிறேன்

எல்லாத் திசையிலும்
தீப்பிழம்புகள்

கருகி உதிரும் மகரந்தங்களின் பிண வாசம்
வனங்களின் புண்ணில் புரையோடுகிறது

சுழலும் கனலின் விரல் பிடிக்கத்
தயங்கும் மௌனத்தின் மயிர்க்கால்கள் வெந்து போகிறது

சாம்பலாகும் பொழுதொன்றின் தனிமை வெப்பத்தில்
நீறு பூத்து மிச்சமாகிக் கிடக்கிறது

நீயென்றும் நானென்றும்
சொற்கள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5253

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக