வியாழன், மார்ச் 27, 2014

வரவுக்குரிய கண்கள்..

*
மெல்ல நகர்கிறது வாசலிலிருந்து
நிழல் கூத்து
கீற்றெனக் கிழித்து சிதறுகிறது
வெளிச்சத் துண்டொன்று

கீழ்ப் படியில் உட்கார்ந்திருக்கிறாய்
வெட்டிய நகப் பிறைகளோடு
வரவுக்குரிய கண்கள் உடைத்து
குரல் பிரிந்து தொங்கும்
சொற்களுடன்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 3 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5912

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக