சனி, ஜனவரி 16, 2016

சுவை தப்பின அர்த்தக் கசப்பு

*
மௌன ஊற்றில் கசியும் குருதியை
பருகும் வாய்

நினைவின் முகட்டில் நெம்பும்
சொல்லின் கூர்மையில்

சுவை தப்பின அர்த்தக் கசப்பில்
விழுங்கும் எச்சிலால்
உயிர் கவ்வி விடுவிக்கும்
பொழுதை

இருள் பூசி அழைக்கிறது
பேய்க்கூச்சல் குரலாகி

****

நன்றி : கணையாழி [ஏப்ரல் 2015]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக