*
இந்த அறையின் இருளுக்குள்
என் ஜன்னல் கடக்கும்
காலடிச் சத்தங்கள்
மூடிய அதன் கதவின் இடுக்கின் வழியே
மழை நீரைப் போல் வழிந்து
இறங்குகிறது
மெல்ல பரவி என் பாதங்களைத் தழுவி
காதுகளை எட்டும்போது
தெருவின் விசும்பல்
மனவெளியில்
நிம்மதியற்று அலைகிறது
அடித்து ஓய்ந்த பின்
காற்றில் மிச்சமிருக்கும்
ஆலய மணியின்
கடைசி ரீங்காரமாக
*****
நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 2 - 2011 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15390&Itemid=139
இந்த அறையின் இருளுக்குள்
என் ஜன்னல் கடக்கும்
காலடிச் சத்தங்கள்
மூடிய அதன் கதவின் இடுக்கின் வழியே
மழை நீரைப் போல் வழிந்து
இறங்குகிறது
மெல்ல பரவி என் பாதங்களைத் தழுவி
காதுகளை எட்டும்போது
தெருவின் விசும்பல்
மனவெளியில்
நிம்மதியற்று அலைகிறது
அடித்து ஓய்ந்த பின்
காற்றில் மிச்சமிருக்கும்
ஆலய மணியின்
கடைசி ரீங்காரமாக
*****
நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 2 - 2011 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15390&Itemid=139
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக