வியாழன், ஜூலை 14, 2011

குற்றம் சுமக்கும் நவீனப் படிமங்கள்..


வந்துப் போவதில் இருக்கும்
சிரமத்தை பொருட்படுத்தவில்லை
வார்த்தைகள்

காகிதங்களின் முனை மடங்குதலில்
அரூபமாகும் எல்லைகளை
மீறுவதாக குற்றம் சுமக்கின்றன
நவீனப் படிமங்கள்

ஒவ்வொரு புள்ளியோடு
முடிந்துவிட்டதாக வரும் அறிவிப்பு
ஒரு பைத்திய இரவின்
அர்த்த ஊளையிடுதலாகவோ
வால் விடைத்து இருளை நக்கும்
ருசியெனவோ
மாம்சத்தின் ரத்த கவுச்சியென்றோ
தீர்ந்துவிடுகிறது

உடன்படிக்கையோடு கை குலுக்குதல்
சிரமமென பொருட்படுத்துவதில்லை
வார்த்தைகள்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 4 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15405&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக