வியாழன், ஜூலை 28, 2011

நிரம்பி வழியும் பிளாஸ்டிக் நாற்காலிகள்..


தோளை லேசாகத் தட்டி
கையைக் குலுக்கி ஆறுதல் சொல்லும் தருணம்
குறுக்கும் நெடுக்குமாக உடைகிறது
பெரும் சப்தத்துடன்

துக்கம் அடைத்துக் கொண்ட குரல்கள்
பால்கனி வழியே சிந்திக் கொண்டிருக்கிறது
இன்னும் பிடிவாதமாக சொட்டு சொட்டாய்

நிரம்பி வழியும் பிளாஸ்டிக் நாற்காலிகளின்
நிறங்கள் எப்போதும் ஒன்று போலவே இருக்கின்றன
சாமியா பந்தலின் நிழலுக்குள்

வேறு வழியற்று அத்தெருவில்
ஷட்டர் இறக்கப்பட்ட கடைகளின் வாசலில்
நின்று கொண்டிருக்கிறார்கள்
இறுதி ஊர்வலம் புறப்பட்டதும்
கடையைத் திறந்து கல்லாவைக் கொஞ்சமேனும் நிரப்ப..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 30 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15876&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக