சனி, ஜூலை 23, 2011

தாழப் பறக்கும் நம்பிக்கை நிழல்..

*
அப்படியொரு நிர்க்கதியை
இதற்கு முன்பும் அடையச் செய்ததுண்டு

ஒவ்வொரு மீட்சியிலும்
தாழப் பறக்கும் நம்பிக்கை நிழல்
மழைப் பொழிவதில்லை

இறுகப் பற்றிக் கொள்ள நேரும் கரங்களில்
யாவற்றையும் வாசித்து விடுகிறது
அழுந்த நெளியும் ரேகைகள்

அப்படியொரு நிர்க்கதியை
இப்போதும் அடையும்படி ஆகிறது

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 25 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4586

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக