சனி, ஜூலை 23, 2011

உள்ளங்கைக்குள் அடங்கும் நேற்றைய இருள்..


இப்படியொரு ஆச்சரியத்தை
யாசிப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை
பேசுவதற்கு ஏதுமற்று
உட்கார்ந்திருக்கிறாய்

உன்
பிடிவாதத் தருணங்களை
விரல் விட்டு எண்ணுகிறேன்

பார்வை ஊசிக் கொண்டு பழைய சம்பவங்களை
நிதானமாகத் தைக்கத் தொடங்குகிறாய்

நமக்கிடையே ஆவிப் பறக்க
வைக்கப்படும் கண்ணாடிக் கோப்பை நிறைய
வார்த்தைகள் மிதக்கின்றன

அவை நமக்குத் தேவைப்படவில்லை

உள்ளங்கைக்குள் அடங்கிவிட்ட நேற்றைய
இரவின் இருளை சுரண்டிப் பிரிக்கிறேன்
சிறு புள்ளியென அதில் ஒளிர்கிறது
நீ தந்த முத்தம்

ஆவலோடு உன் மௌனித்த உதடுகள் கொண்டு
அதை ஒற்றியெடுக்கிறாய்

அதுவரை மிதந்த வார்த்தைகள்
ஒவ்வொன்றாய் கனத்து கோப்பையின் அடியில்
தேங்குகிறது
ஓசைகளேதுமின்றி

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 25 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4586

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக