வியாழன், ஜூலை 28, 2011

முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..

*
ஒரு கறுமைப் பொழுதை
ஊற்றிக் கொண்டிருக்கிறேன்
இரவின் குடுவையில்

வெளிச்சத் திரள் என
சிந்துகிறாய்
துயரத்தின் வாசலில்

கைப்பிடியளவு இதயத்தில்
அழுத்தும் நினைவு நாளங்களில்
முடிச்சிட்டுக் கொள்கிறது

எப்போதும்
முடிவற்று விரியும்
கோரிக்கை யாவும்

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூலை - 10 - 2011 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக