வியாழன், ஜூலை 28, 2011

மீளா நிழல்


கைப்பிசைந்து நிம்மதியிழக்க நேர்கிறது
இப்பெரு அமைதியில்

காலடி ஓசைகளின் அதிர்வில்
நடுங்குகிறது நிற்கும் நிழல்

ஒளி கசியும் ஜன்னல் திரையில்
மடிந்து மடிந்து தொங்குகிறது
மீளா துக்கம்

கையெழுத்து இடச் சொன்ன படிவத்தில்
உறுதி செய்து கேட்கிறார்கள்
அவன் மரணத்தை

வெண்துணி போர்த்திய உடலென
வருகிறான் பின் எப்போதும் பார்க்க விரும்பாத
விழிகள் நிலைக் குத்த..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூலை - 24 - 2011 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக