வெள்ளி, செப்டம்பர் 23, 2011

படர்ந்து கிளைக்கும் மெல்லிய நரம்பின் சினம்..

*
ஒரு
கடுமையான மழை இரவில்
மறுதலிக்கப்பட்ட சஞ்சலங்கள்
முளை விடுகிறது
நஞ்சு நிலத்தில்

அதன் தளிர் இலைகளில்
நுனி சிகப்பில்
படர்ந்து கிளைக்கும்
மெல்லிய நரம்பின் சினம்
அண்ணாந்து நோக்கும்
வானின் வெறுமையில்
சூல் கொள்கிறது மேகமென

கனத்து கருக்கும்
சாம்பல் பொதியாக மிதந்து நகர
வீசும் காற்றில் உடைந்து
கீழிறங்குகிறது முதல் துளியென
மறுதலிக்கப்பட்ட சஞ்சலம்

நிலமெங்கும் அடர்ப் பச்சை

ஒரு கடுமையான
மழை இரவென்று மட்டுமே
முடிவு செய்யமுடியாத
இருள் சிடுக்காக பெருகுகிறது நஞ்சு

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ செப்டம்பர் - 17 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16614&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக