வெள்ளி, செப்டம்பர் 23, 2011

எதிர்ப்பின் கதவினூடே நுழையும் உன் மௌனம்

*
உன்னை ஏற்றுக் கொள்ள முடியாத
அசௌகரியங்களைக்
கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது
இந்த இரவு

கடக்க முடியாத எல்லைக்கோடல்ல 
உன் வாதம்
நான் விரும்பாத வரைப்படம் அது

எதிர்பார்ப்பின் கதவினூடே நுழையும் உன் மௌனம்
சுலபமாய் மறந்து விடுவது
மூடியிருக்கும் என் ஜன்னல்களை

வரையறைகளை நிரப்பித் தரச் சொல்லி
நீட்டப்படும் படிவத்தில் எதை நிரப்ப
எதை விட்டுவைக்க

கையெழுத்தை மட்டும் கிறுக்கி வைக்கிறேன்
புலம்பு உன் விமர்சனத்தை

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 26 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4822

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக