சனி, அக்டோபர் 08, 2011

இரவின் கரையிலிருந்து அழைக்கப்படும் பெருமழை..


இருளை மெழுகி வைத்திருக்கும்
அகன்ற நெடுஞ்சாலைப் பரப்பை
கடக்க யத்தனிக்கிறது
சின்னஞ் சிறிய தவளைக் குஞ்சு

சிதறும் வெளிச்சத் திரவம் பட்டு
கண் கூசி திகைக்கிறது சில நொடி

அதன் ஸ்தம்பித்த கணத்தை
நசுக்கி விடாத டயர்களைத் தொற்றியபடி
சாலையில் கசிந்து உருளுகிறது விளக்கின் சிகப்பு

இரவின் இக்கரையிலிருந்து
அக்கரைக்கு நகர்ந்து விட்ட தவளைக் குஞ்சு
மற்றுமொரு பெருமழையை அழைக்கிறது
பசுந்தளிரென விரிந்த இலையின் மீதமர்ந்து..
தன் இருபக்க தாடைகள் உப்ப..

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 3 - 2011 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4862


நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ அக்டோபர் - 2 - 2011 ]
http://www.navinavirutcham.blogspot.com/2011/10/blog-post.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக