திங்கள், அக்டோபர் 17, 2011

திருகும் தண்ணீர்த் துளிகள்..

*
மேஜையின் எதிர் விளிம்பில் முடிந்து விட்டது
வசீகரத்துக்கென விரித்திருந்த மஞ்சள் பூக்கள்

விரல் நகங் கொண்டு நீ திருகும்
தண்ணீர்த் துளிகளில் கரைந்துக் கொண்டிருக்கிறது
பேச முடியாமல் தவிக்கும் உனது வார்த்தைகள்

நெற்றிப் பரப்பில் மிச்சமிருக்கும்
எனது வெயிலை ஒற்றியெடுக்க
பயன்படும் நாப்கின்னில்
காத்திருந்த வரை நீ வரைந்து வைத்த
கோட்டுச் சித்திரமொன்று
கையேந்திச் சிரிக்கிறது
நம் மௌனத்தை

கூரையிலிருந்து வழியும்
ஆரஞ்சு நிற விளக்கொளியில்
உன் முகத்தில் படர்ந்துக் கொண்டிருக்கிறது
மஞ்சள் பூக்களின் இதழ்கள்

*******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ அக்டோபர் - 24 - 2011 ] 
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17110&Itemid=139


நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ்  [ அக்டோபர் - 24 - 2011 ] 
http://www.navinavirutcham.blogspot.com/2011/10/blog-post_24.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக