புதன், அக்டோபர் 12, 2011

நீட்டத் தயங்கும் நேசக் கரம்..

*
மதயானை உருவமாகி
காதுப் புடைத்து ஓரிடத்தில் நிற்கிறது
என் மௌனம்

நீயுன் நிலத்தின் சதுப்பில்
பயிரிட்டுப் பச்சையமாக்கிய துரோகங்கள்
காற்றில் நுனிப் பறக்கத்
தலையசைக்கும் திசையில் பரவுகிறது
தூவிச் சலித்த வார்த்தைகளிலிருந்து
புறப்படும் நஞ்சு விதை வாசம்

திரளும் கால்களின் தினவில்
அழுந்தும் பாதம் எடுக்கும் அடியில்
சர்வம் நாசம்

புன்னகைக் கொடிப் படர்த்தும் 
நரம்பின் பற்றுதலுக்கு நீட்டத் தயங்கும்
நேசக் கரத்தில் தெறித்து விழும்
வெப்பம் மிகுந்து
ஒரு
ரத்தத் துளி

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 17 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4894

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக