சனி, அக்டோபர் 08, 2011

மையில் கசியக் காத்திருக்கும் அனர்த்தங்களின் நிறம்..

*
விரலிடுக்கில் உருளும் பேனாவில்
பதறுகிறது வார்த்தை

துணை வர மறுக்கும் எழுத்துக்கள்
ஒவ்வொன்றாய் ஊறி உலர்கின்றன
வெட்டுப்பட்ட நாக்கில்

மையில் கசியக் காத்திருக்கும்
அனர்த்தங்களின் நிறம்
கொஞ்சங்கொஞ்சமாய் உறைகிறது
திரள்வதற்கென குவியும் முனையில்

அழுந்தும் முள்ளின்
தயக்கம்
ஒரு சிறிய நெளிக்கோட்டை
இரண்டுமுறை வெறுமைத் தாளில் பரீட்சித்து
மௌனமாகிறது அனைத்தையும் விழுங்கி

*******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 10 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4881

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக