திங்கள், அக்டோபர் 17, 2011

குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும் மனிதன்

*
உதிர்ந்து விழுவது பற்றி
அறிந்து வைத்திருக்கிறது பழுத்த இலை

அது சருகாகி
தரையில் உருள்வதற்குரிய ஒலியை
சேமித்து வைத்திருக்கிறது காற்று

கான்க்ரீட் பிளாட்பார்முக்கு கீழே
புதியதாய் கிளைவிட்டிருக்கும்
மஞ்சள் வேர் நுனியை ஈரப்படுத்துகிறது
மணல் அப்பிக் குடிநீர் சுமந்து போகும்
கார்ப்பரேஷன் குழாயின் துரு

மரத்தின் உச்சியில் இதழ் விரிக்கிறது பச்சை
வானம் சிரிக்கிறது கடலாய்

குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும் மனிதன்
பான்பராக் மெல்லுகிறான்
செக்கச் செவேலென்று
வெயில் மீது துப்ப

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 17 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4894

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக