*
எதை வேண்டுகோள் என்று இருமாந்தமோ
அதன் எல்லையை நிர்மாணிக்கும் வேலியை
நட்டு வைத்திருக்கிறது ஒரு சமரசம்
எங்கே கழுத்து நரம்புப் புடைக்க கூக்குரலிட்டமோ
அந்த இடம் ஒரு தடை உத்தரவுக்கான
கதவைத் திறந்து வைக்கிறது
யாரிடம் யாசிக்கச் சொல்லி
சிபாரிசு செய்யப்பட்டமோ
அந்த அதிகாரத்தின் விலை ஏலத்துக்கு வருகிறது
மௌனச் சங்கிலியைக் கோர்த்துக் கொண்டு
வலம் வரும் நெடுஞ்சாலையில்
வெயில் மட்டுமே தனிமையில் காய்ந்துக் கொண்டிருக்கிறது
எதையும் பொருட்படுத்தாமல்
எந்தவொரு நிழலையும் அனுமதியாமல்
*******
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 24 - 2011 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4916
எதை வேண்டுகோள் என்று இருமாந்தமோ
அதன் எல்லையை நிர்மாணிக்கும் வேலியை
நட்டு வைத்திருக்கிறது ஒரு சமரசம்
எங்கே கழுத்து நரம்புப் புடைக்க கூக்குரலிட்டமோ
அந்த இடம் ஒரு தடை உத்தரவுக்கான
கதவைத் திறந்து வைக்கிறது
யாரிடம் யாசிக்கச் சொல்லி
சிபாரிசு செய்யப்பட்டமோ
அந்த அதிகாரத்தின் விலை ஏலத்துக்கு வருகிறது
மௌனச் சங்கிலியைக் கோர்த்துக் கொண்டு
வலம் வரும் நெடுஞ்சாலையில்
வெயில் மட்டுமே தனிமையில் காய்ந்துக் கொண்டிருக்கிறது
எதையும் பொருட்படுத்தாமல்
எந்தவொரு நிழலையும் அனுமதியாமல்
*******
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 24 - 2011 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4916
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக