திங்கள், அக்டோபர் 17, 2011

தனிமையில் காயும் வெயில்..

*
எதை வேண்டுகோள் என்று இருமாந்தமோ
அதன் எல்லையை நிர்மாணிக்கும் வேலியை
நட்டு வைத்திருக்கிறது ஒரு சமரசம்

எங்கே கழுத்து நரம்புப் புடைக்க கூக்குரலிட்டமோ
அந்த இடம் ஒரு தடை உத்தரவுக்கான
கதவைத் திறந்து வைக்கிறது

யாரிடம் யாசிக்கச் சொல்லி
சிபாரிசு செய்யப்பட்டமோ
அந்த அதிகாரத்தின் விலை ஏலத்துக்கு வருகிறது

மௌனச் சங்கிலியைக் கோர்த்துக் கொண்டு
வலம் வரும் நெடுஞ்சாலையில்
வெயில் மட்டுமே தனிமையில் காய்ந்துக் கொண்டிருக்கிறது
எதையும் பொருட்படுத்தாமல்
எந்தவொரு நிழலையும் அனுமதியாமல்

*******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 24 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4916

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக