சனி, அக்டோபர் 08, 2011

கல் மரம்


பறவைகளின் கூட்டை
முட்டைகளை
திருட்டுத் தனமாய்
உடைத்துக் குடிக்க ஊர்ந்த பாம்பை
கை கால் முளைத்த ஆதாமின் விலா எழும்பொன்று 
பறித்துத் தின்னப் பரிந்துரைத்த
ஆப்பிளை
தன்
நிழல் பரத்திக் கலைத்த நிலத்தை

அனைத்தின் சாட்சியாக
இருந்திருக்க நேர்ந்த நூற்றாண்டுகளின்
செதில்கள் கல்லாகி

மியூசியத்தின் கம்பி வலைக்குள்
காட்சியாக வெய்யிலில் காய்கிறது
செந்நிற மரம்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 3 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4862

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக