சனி, அக்டோபர் 08, 2011

அடுத்த சந்திப்பில்..

*
எதுவும் பேசுவதற்கு இல்லையென்றபடி
மௌனித்திருந்தான்

திசையறியா பறவையொன்றின் சிறகில்
தன்னைச் செருகிக் கொண்ட
ரகசியத்தை
துண்டுச் சீட்டில் குறிப்பாக எழுதித் தந்தான்

அடுத்த சந்திப்பில்
தானொரு வனத்தின் மரத்தில்
அகன்ற இலையில் பழுத்த நரம்பாக
மாறிவிடும் திட்டத்தை விளக்குவதாக
ஒரு
வாக்குறுதியையும்
பின்குறிப்பிட்டிருந்தான்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 10 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4881

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக