சனி, ஜனவரி 29, 2011

சொல்லுவதில் என்ன இருக்கிறது..!

*
சொல்லுவதில் என்ன இருக்கிறது..?
ஓர் அவமானத்திற்கு பிறகு
ஒரு தலைகுனிவுக்கு பிறகு
ஒரு துரோகத்துக்கு பிறகு
ஒரு பிடிப்படலுக்கு பிறகு
ஓர் எள்ளலுக்கு பிறகு
ஒரு களங்கத்துக்கு பிறகு
ஓர் இரவுக்கு பிறகு
ஒரு கலவிக்கு பிறகு
ஒரு கண்ணீர்த் துளிக்கு பிறகு
ஒரு தற்கொலை முயற்சிக்கு பிறகு
ஒரு தனிமைக்கு பிறகு

பரவாயில்லை
விட்டுத்தள்ளுங்கள் என்று
சொல்லுவதில் என்ன இருக்கிறது..!

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜனவரி - 17 - 2011 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3872

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக