*
நடுங்கும்
உன் விரல்களைப் பற்றும்
விருப்பமில்லை மழைக்கு
காற்றில் வலு கூடிய குளிர்ந்த ஈரம்
கடலின் அலையிலிருந்து
உப்புத் துளிகளைச் சுமந்து விசிறும்போது
உன்
உதடுகளில் விழுகிறது
முதல் முத்தம்
பிறகு
நிலவின் நிறம்
மஞ்சளாக உருகி
நீரின் விளிம்பில் பதுங்கிட
உன்
விரல்களைப் பற்றும்
விருப்பமில்லை கடலுக்கும்
நடுங்காதே..!
****
நன்றி : ' கீற்று ' இணைய ' இதழ் [ ஜனவரி - 2 - 2011 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12156&Itemid=139
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக