திங்கள், ஜனவரி 23, 2012

சொல்லின் நீர்மைச் செதில்..

*
முன் தீர்மானங்களற்று சொல்வதற்கு
ஒரு சொல் கூட மிச்சமிருப்பதில்லை

காத்திருக்கும் தனிமையில்
எதிர்ப்படும் மௌனங்கள்
செதில் செதிலாக அசைக்கிறது
இவ்விரவை

புள்ளிகளாய்த் திரண்டு கோர்க்கும்
பனித்துளியொத்த தருணங்கள்
ஈரம் குளிரக் காத்திருக்கிறது

ஒரு சொல்லின் நீர்மையில்
எப்போதும்
மிதந்து கொண்டே இருக்கும்
சொல்லப்படாத அர்த்தங்கள்
மிச்சம் வைப்பதில்லை
வேறெந்த சொல்லையும்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜனவரி - 10 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17962&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக