திங்கள், ஜனவரி 23, 2012

நிறம் மயங்கும் சொற்கள்..

*
நினைவைச் சொல்லும் ஒரு துளியைப்
பருகக் கொடுத்தாய்

தொண்டைக்குள் இறங்கும் பாதையில் அது
ஓசையில்லாமல் எல்லாக் கதவுகளையும்
சார்த்துகிறது

உனது பேரன்பின் முடிவின்மையில்
என்னை ஒரு அடையாளமாய் செருகிச் செல்கிறாய்

மீண்டும் மீண்டும் வாசிப்பதற்குரிய
எனது இரவுகளை அடுக்குக் குலையாமல்
தைத்து வைத்திருக்கிறேன்

யாவற்றையும் தொட்டு துல்லியத்தின் நினைவைச் சொல்லும்
ஒரு துளியைப் பருகக் கொடுக்கிறாய்

நிறம் மயங்கும் சொற்களில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
கொஞ்சங் கொஞ்சமாய்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5209

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக