புதன், ஜனவரி 25, 2012

மெல்லப் பிடி நழுவும் கண்ணாடிக் கதவுகள்..

*
ஒரு தலைக் குனிவின் அவசரத்தில்
கடிகாரத்தின் நவீன முட்கள்
அசையவில்லை

சொற்கள் இறையும் அறையில்
நா ஒடிந்த பேனாவின் பள்ளத்தில்
வழிகிறது
ஓர் ஆதி மொழி

திரும்பும்போதோ
வெளியேறும்போதோ
உறுத்துகிறது மெல்லப் பிடி நழுவும்
கண்ணாடிக் கதவுகள்

தனித்தத் தெருவில்
ஒரு தலைக் குனிவின் நிதானத்தில்
அவசரமின்றி நம் மீது பரவத் தொடங்குகிறது
கைவிடப்பட்ட வெயிலொன்று

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5225

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக